பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


இனிதின் எடுத்துக்காட்டும் தொடர்கள். மோட்ச இன்பம் அடைதல் அரிது. அவ் அருமையினையும் எளிமையாகத் திருமால் இருஞ்சோலையினைப் போற்றினுல் பெறலாம் என்றும் குறிப்பிடுகிறார். அத்திருமால் இருஞ் சோலையின் அடிவாரத்திலேயே தாம் வாழும் பேற்றை விரும்புகிறார் இவ்வரசப் புலவர் எனில், திருமால் இருஞ்சோலையிடத்து இவருக்கு இருக்கும் பற்றின் பெருக்கத்தை வேறு எதனால் விளக்கிக் கூற இயலும்? இங்கனம் கூறும் பரிபாடல் அடிகள்.

"இருங்குன்றத்து அடி உறை இயைகஎனப்

பெரும்பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே"

என்பன.