பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் + 235 + இவர் அமீனாவைப் பற்றிச் சொன்னது: ஆஆ என்றுஅலை ஆமீன் வாயில் அகப்பட் டார்வெளி யாவது முண்டோ? சுறா மீனையுமே தூக்கி விழுங்கும் பொல்லா மீன்.இது போலொரு மீனைக் கடலிலும் கூடக் கண்டவ ரில்லை என்பது. வக்கீல் குமாஸ்தா என்னும் கூட்டத்தைப் பற்றி: எவரினும் பெரியவன் யானே ஆவேன் எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்: இம்மிரு கத்தையும் எடுத்தொரு மடியில் வானெலாம் சுற்றி வருவதற் குள்ள ஆற்றலு முடையேன், ஆனால், அத்திறம் அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட அற்பமும் ஆசை எனக்கிலை; அன்றியும் உருவமோ நீளமோ உயரமோ கண்டே மூட உலகமும் மோசம் போகும்; ஆதலால் ஒருவரும் அறியா திருந்தும்இந் நாலுகை யானை நடத்து கின்றேன் என்றுதன் முதுகி லிருக்கும் ஈயொன்று எண்ணாது டம்பம் எடுத்துரைப் பதுபோல் 'இரவும் பகலு இடைவிடாமல் பற்பல வருஷம் படித்து பி.எல். எம்.எல். பட்டம் எல்லாம் பெற்று வந்திடும் பெரிய வக்கில் மாரும் யாங்கள் இல்லையேல் என்செய்வார்? எனப் புத்தி யிலாது புலம்பித் திரியும் குமஸ்தா வெனும்ஈக் கூட்டம் என்று கூறுவார்.