பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

தடுமாற்றம்

உயிருக் குயிரெனும் உத்தம
நண்பரெலாம், 'உணர்வில்
உயர்ந்தவன் நீயெனவே,
பெயரும் பொருளும் பெருமையும்
பேண வுறும் - பதவி
பெறமுய லென்றுரைத்தார்!
துயர முறாதநல் துயவான்
மீனினங்காள்! - உங்கள்
தோழமை வாய்க்குமருஞ்
செயல்களைச் செய்யஎன் சிந்தனை
செல்வதுமேன் - என்ன
செய்வதினியிதற் கே!

கூடப் பிறந்தச கோதரர்
கூறினர்காண்! - மாட
கூடங்க ளாயமைத்திங்
காடலும் பாடலும் மாகவாழ்
வோமெனவே; - ஒன்றி
அன்புட னாதரவாய்!
தேடக் கிடைக்காத தேசுடை
மீனினங்காள் - உள்ளம்
தெளிந்திட வில்லையிதில்!
நாடுவ னுங்களைப் போலொளி
நல்கிட வே - இந்த
ஞாலந் தனிலிருந்தே!

126