பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

நிறைமொழி


இறைவனின் இன்னருளுக் கென்று முரியோன்
நிறைகுணன் முத்தப்ப னென்றே, முறையாக
நன்னூல்க ளாய்ந்தறியும் நாவலர் தம் மகத்தில்
பொன்னாக வைப்பர் பொதிந்து.

உச்சிப் பொழுதா யுறைவோரு முள்ளத்திற்
கச்சந் தருமிரவே யாவோரும் - மெச்சிடவே
பொய்கை மலரரசி புன்முறுவல் பூத்தளிசெய்
வைகறையாய் வாழ்ந்தா னவன்.

துள்ளிப் பறவாத் துணையன்னப் பார்ப்புறங்கும்
பள்ளிக் கமலப் பழனத்துள் - வெள்ளம்
பெருகிப் பரந்து பயிர் பேணும்தாய் நாட்டுக்
குருகி யுலைந்தானுளம்!

பன்னிரண்டா மாண்டு பதமாய்ப் பழனமெலாம்
சென்னெல் விளைவறுக்கும் திங்களிலோர் - நன்னூல்
அணிவதில் சூழ்புறத்துக் குன்றேறி யாங்கம்
மணிக்கடலைப் பார்த்தான் மகிழ்ந்து!

பஞ்சு சிதறிப் பரந்து கிடந்ததெனும்
பஞ்சுப் படலத்தி னூடேதன் - நெஞ்சும்
நெகிழ்ந்து நினைவு நிறைவேறிற் றென்றே
மகிழ்ந்தான் மரக்கலம் கண்டு!

143