பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

இந்த எழிலிடத்தி லென்னிதயப் பொன்மலர்கள்
சிந்தித் தொடுத்தேன் செண்டுகளாய் - அந்தநெடுங்
குன்றுகளில் வாழும் குழந்தைகளின் நல்வாழ்வுக்
கின்றியமை யாமை யறிந்து.

ஆன அவர்தம்பே ராவ லவமாக
ஊனமின்றி யுள்ளஞ் சுமையின்றி - நானுமினி
யிவ்விடத்தை விட்டேகற் கென்று மியலுவதோ
எவ்விடத்திற் கேனு மிசைந்து.

ஆடையை மாத்திரமே யன்று களைவதுடல்
மூடிய தோலை முழுவதுமே - கூடி
யிருப்பவர்கண் காணுமா றின்றென்கை கொண்டே
வுரிப்பவனு மாவே னுலைந்து.

எண்ணத்தை மாத்திரமே யன்று பிரிந்தின்று
திண்ணமுடன் விட்டினிநான் செல்லுவது - உண்ணப்
பசிவேட்கை கொண்டு பரபரக்கும் நெஞ்சை
விசித்தழவே செல்குவன் விட்டு.

நேயர்தா மென்றும் நிலைத்திருக்கும் பேரன்புத்
தாயர்தாம்! தாங்கும் தனையர்தா - மாயினுமென்
என்னாலுந் தங்கற் கியலாத தால்செல்வேன்
பன்னூறு காதம் படர்ந்து!

அன்னை கடலு மலைக்கரங்கள் தாமரைத்துந்
தன்னை யணுகச் சாற்றுகிறாள் - என்னை?
புறப்படவே வேண்டும், பொழுதுடன்நா னென்றன்
பிறப்பிடம் சேரப் பிரிந்து.

145