பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்


அவளை யவனு மயராத வன்போ
டுவகைமிக நோக்கினா னொன்றி -யவனை
நுணுகி யறிந்து நுவன்றாள் முதலி
லணுகினவ ளாவா ளவள்.

'இப்பொழுதும் சிந்தனையில் மூழ்கி முழுவதுஉம்
அப்பழுக்கற் றாய்ந்துரைக்கு மாசானே! இப்பொழுதும்
எத்தும்தாய் நாட்டுக் கெடுத்தேக வந்ததுநீர்
காத்திருந்து பார்த்த கலம்!

சொந்த வுறைவிடத்தைச் சுற்றி யலமந்த
சிந்தனைகள் தேங்கும் திருநாட்டை - முந்தி
அடைய விழைகின்றி ராழ்ந்தவெம் மன்பும்
தடையாக நிற்கா தினி!

ஆயினு மீதொன்றை யாவலுடன் கேட்கின்றோம்
தேயத்தை நீத்தினிநீர் செல்லும்முன் - நேயத்தால்
உங்கள் திருவுள்ளத் துள்ளுறையு முண்மைகளை
எங்கட்குச் சொல்வி ரெடுத்து!

அதைநாங்க ளெங்களது மக்களுக் கன்புப்
புதைபொருளாய்ப் போற்றிப் புகல்வேம் - அதையவர்கள்
தங்களது மக்கட்குத் தாமுரைக்க அங்கனமஃ
தெங்கும் வழங்கு மிருந்து!

உமது தனிமையில் கண்டீ ருளதாம்
எமதுவாழ் நாளி னியல்பை - யுமது
விழிப்பினில் கேட்டீர் விளங்காவெம் வேட்கை
எழுப்பு மிதயத் தொலி!

52