பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

"இழுதொக்கும் அருஞ்சொற்களெல்லாம் வந்தின்
'றெனையெழுதிங் கெனையெழு'தென் றியம்பக் கேட்டே
எழுதக்கை பறக்கிறதென் னிதயந் தன்னில்
இருந்தகவி பிறக்கிறதற் கெனவே; நீயோ
'முழுதுக்கும் அதிகாரி நான்தான் என்றே
முடிச்சவிழ்த்து மோகனங்கள்கொட்ட நின்றாய்!
பொழுதுக்கு யாரிடுவாராணை: சற்று
பொறுத்திருந்து பொழுதேபோ வெனவே" என்றேன்.

"புவியுழுது சேறாக்கிப் பயிரை நட்டுப்
பொன்போன்று விளைந்தநெல்லைக் குத்தித் திரட்டி
அவியிழுது பெய்துகலந் தட்ட சோற்றை
அருந்திடவா ருங்களென அழைக்கின்றேன்...
'கவியெழுதப் பறக்கிறது கை யென் கின்றீர்;
கற்கண்டாய் எழுதுங்கள்:கவிதைக் கென்றன்
செவியமுது கொண்டிருக்க வில்லை; நானும்
செல்கின்றேன்." என்றெழுந்து சென்றாள் தாரா.

சேவலினைத் தேடிவந்த செங்கா லன்னச்
சிறுபெடையீ தெனத்திரும்பி வந்தாள்: "சேர,
நாவலினைத் தாருங்கள் அத்தான்! அந்த
'நட்டார்மன் எழுதினதை, யென்றாள். நானும்
ஏவலனைப் போலெழுந்து பெட்டி, பேழை -
இல்லாத இடமெல்லாம் தேடித் தீர்த்தவ்
வாவலினைப் பெருக்கிடவே சொன்னேன்:
"இந்த அல்லியர சாணிகதை படிநீ! என்றே.

42