பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

"கையொன்று நளிைநீண்டு நேற்று நீயென்
கன்னத்தைப் பதம்பார்த்து விட்டுச் சென்றாய்!
பொய்யொன்று மெய்யென்னப் பொருந்தி யின்றும்
பொல்லாத பழிபோட வந்தா" யென்றே
"சையென்று கதவுதனைத் திறந்து சற்றுத்
தலைநீட்டத் தென்பட்டாள் தாராத் தங்கம்!
மையொன்று கண்மழையாய், மங்கல் போர்த்த
மதிமுகமாய் மாழ்கிமனம் மாறச் சொன்னாள்:

"பேர்விசயம் புரியாமல் கவிஞ னென்று
பேர்பெற்றுக் கொண்டென்வாய் பிடுங்குகின்றீர்!
பார்வசியம் செய்பவர்கள் உயர்ந்தோர் தம்மைப்
பாழாக்கும் படுபாவிப் பெண்க ளந்த
ஊர்வசியும் அரம்பையுமே! என்பேர் தாரா!
ஒர்ந்திதனை உணராமல், நேற்று மாறாய்
நேர்வசிகொண் டென்நெஞ்சில் குத்தல்போலந்
நீசர்பெய ரிட்டழைத்தீர்எனைநீ" ரென்றாள்.

சொத்திட்டி சுகமீட்டி வைத்த தந்தை,
சுவைபடச் சொல்லுட்டி வளர்த்த அன்னை,
புத்தேட்டில் மணம்பதியப் புகட்டிப் புத்தி
போதித்த ஆசிரியன். - இவர்கட் கன்றிக்
கத்திட்டி கொண்டென்னைக் குத்தி னாலும்,
குன்றிமணி யளவெனினும் குலையா நெஞ்சம்
மத்தாட்டி விட்டதயி ரெனவே இன்றிம்
மாதாட்டிக் கலக்கிவிட மலைத்து விட்டேன்.

47