பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

விண்ண கம்எனும் பெண்மணி பாடி
வீணை மீட்டி விளைக்கும் இசைக்கு
மண்ணில் மாந்தர் மகிழ்ந்திடு மாறு
மாம யில்களித்தாடுதல் கண்டு,
கண்ணி ரண்டும் பெறும்பய னின்று
காணப் பெற்றவன் போன்று களித்தென்
எண்ணம் சொல்செய லென்பன வெல்லாம்
இழந்து சித்திர மொத்தவ னானேன்.

குடியி ருந்தஎன் குடிலுக்கு முன்னால்
கோவி லில்குடி கொண்டுள்ள தேவி
கடிம லர்ப்பொழில் பைம்புற் றரையில்
கவின்மி குந்ததோர் காட்சியி தென்ன.
இடிமு ழக்கினுக் கேற்ப வியங்கி
இலங்குந் தோகை குலங்க விரித்து
படியி லும்பர மானந்த மென்னப்
பரத நாட்டியம் பண்ணிட லாச்சு!

விண்ண கம்விழை வித்தகி யாகி
வீணை, மீட்டி விளைக்கு மிசைக்கு,
மண்ணில் மக்கள் மகிழ்ந்திடு மாறு
மாம யில்மதித்தாடுதல் கண்டு
கண்ணி ரண்டும் பெறும்பய னின்று
காணப் பெற்றவ னாகிக் களித்தென்
எண்ணம் சொற்செய லென்பன வெல்லாம்
இழந்து சித்திர மொத்தவ னானேன்.

76