பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 : யார் கவிஞன் ? காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்: கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்; தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்: மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன். (3) ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கஎனத் துஞ்சாமல், தமது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன். (4) முடியரசன் படைவலியால் நிலவுலகை ஆள்வர் மன்னர்; பாவலனாம் பாரதியோ உணர்ச்சி யூட்டும் தொடைவலியால் வையத்தை ஆண்டு கொண்டு தொழுதேத்தும் முடியரசன் ஆனான் கண்டீர்! நடையழகு விளங்குகவி யரசன் பாட்டு நாடாண்ட பேரரசை நடுங்க வைத்த படைவரிசை, அப்படையால் உரிமை வேட்கை பாருக்கு நல்கியவன் வீரன் அன்றோ? ( 5 --- - - - l _ தொடைவலி - பாட்டு வல்லமை