பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 *— காலனெனப் பேர்சொன்னால் போதும் நம்மோர் கால்நடுங்கும் கைநடுங்கும் துடிப்ப டங்கும் மேலனைத்தும் வியர்வரும்பும்; மனிதன் பண்பாம்; வீரமிகும் நெஞ்சுடையான் அஞ்சான்; கூற்றைக் காலனெனும் பேரானைக் கூவி, உன்னைப் புல்லெனவே கருதுகின்றேன் வாடா என்றன் காலருகே மிதிக்கின்றேன்" என்று ரைத்த கவிவீரம் நினைப்போர்க்கு வீரம் ஊட்டும் (12} அச் ச1றி லான் பாண்டவரில் மூத்தவனாம் தருமன் தன்னைப் பண்புடையான் அறமுடையான் என்று சொல்லி ஆண்டவனாப் போற்றுகின்றார்; அவனி ழைத்த பெரும்பிழையை ஆர்சொல்வார்? அஞ்சு கின்றார்; * தீண்டரிய சூதாடிப் பணயம் என்று தேயத்தை வைத்திழந்தான்; சீசீ நாட்டை ஆண்டஇவன் சிறியர் செயல் செய்தான்’ என்றே அரசுமுறை பிழைத்தமையை வீரன் சொன்னான் (13) சாதிப் பூசல் சாதியினால் தாழ்வுயர்வு பேசிப் பேசிச் சாத்திரத்தை வேதத்தைச் சான்று காட்டிப் பாதியில் நாம் படுகுழியில் வீழ்ந்து விட்டோம்; பறையனென்றும் குறவனென்றும் பார்ப்பான் என்றும் ஆதியிலே இல்லாத பழக்கந் தன்னை அணுகவிட்டோம்; அடிமையுற்றோம்; மிடிமைப் பட்டோம்; ஆதலினால் சாதியினை ஒழிக்க வேண்டி ஆடுவமே' எனும் பாடல் பாடித் தந்தான் (14)