பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1U' தோற்றுவிட்டான்! பொல்லாத கொடுமைகளை விளைத்து நிற்கும் பொய்ம்மைகளை அழித்தொழிக்கும் சாதிப் போரில் எல்லாரும் ஒர்குலமாய் வாழ்க என்றும் எல்லாரும் சமமென்ப துறுதி யென்றும் சொல்லாளன் பாரதிதான் வெற்றிச் சங்கம் துணிந்து தி விட்டாலும் தோல்வி கண்டான்; இல்லாத சாதிகளுக் கின்னும் ஆட்சி எங்கெங்கும் காணுகின்றோம் சாதிச் சூழ்ச்சி (15) தோற்றாலும் வீரமுளான் ஒய்தல் கொள்ளான் மீண்டும்போர் தொடுப்பதற்கே எண்ணங் கொள்வான்; ஆற்றல்மிகும் பாரதியும் சாதிப் போரில் ஆணினத்தை நம்பியதால் தோல்வி கண்டான் நாற்றமிகு சமுதாயச் சழக்க கற்ற நாரியரைக் குழந்தைகளை அண்டி நின்றே ஏற்றமென்றும் தாழ்ச்சியென்றும் சாதி கூறல் இல்லையடி பாவமடி பாப்பா’ என்றான், (16) வளர்ந்துவரும் பரம்பரைக்கு வீரம் ஊட்டின் வாகைபெறும் நாளைக்குச் சாதிப் போரில்; தளர்ந்தொழியும் அப்பகைமை இந்த நாட்டில்; சமத்துவந்தான் வளர்ந்துவரும் என்று நம்பிக் களங்கண்டான்; பாரதியைப் போற்று கின்ற காசினியிர்! பிறவியினால் உயர்வும் தாழ்வும் உணங்கொண்டு வாழ்விரேல் மீண்டும் தோற்பான்; உரமுடையன் அவன்வெல்வான் சாதி தோற்றால்:(17)