பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?ر 108 உண்மைத் தெய்வம் கடவுளர்தம் பெயராலே பகைமை காட்டிக் கனக்கில்லாத் தேவுகளைப் படைத்துக் கூட்டி மடமையிலே மூழ்கிஇருள் சூழ நெஞ்சம் மயங்குகையில் இளம்பரிதி என்னத் தோன்றி அடகெடுவீர்! அறிவிலிகாள்! உண்மை ஒன்றே ஆண்டவனாம் பிறவெல்லாம் பொய்யாம்' என்று திடமுடைய வீரனலால் வேறு யார்தான் தெளிந்துரைக்க வல்லார்கள்? வாழ்க வீரன்! (18) போர் முழக்கம் மாதர்தமை இழிவுசெய்யும் மடமைக் கோட்டை மதிலிடித்து பொடியாகத் தகர்ப்போம் மாய்ப்போம் வேதமுறை பழையமுறை என்று சொல்லி விரைந்தெழுந்தால் தீயிட்டுக் கொளுத்தி மாய்ப்போம் தாதமுறை ஆணுக்கு வேண்டா என்றால் தையலர்க்கும் அம்முறையை வேண்டா என்போம் காதலர்க்குக் கற்புமுறை பொதுவில் வைப்போம் கண்ணிரண்டும் சரிசமமாக் காண்போம் என்றான் (19) வாழ்க விர ம் ! அரசியலில் வீரனவன் சமுதா யத்தின் ஆணவத்தைத் தகர்த்தெறியும் வீரன் ஆவன் முரசொலியை முழக்குகின்ற தமிழின் வீரன் மூத்ததமிழ்க் கவிவீர்ன் பாடல் தன்னைப் பரசிநிதம் போற்றலுடன் அவன்வ குத்த பண்புடைய நெறியினில் நாம் செல்ல வேண்டும் சுருதிவிட்டுப் பாடாமல் நேர்மை செய்வோம் துாய்மைமிகு வீரத்தை வாழ்த்து வோமே. (20) SSMSSSMSSSMSSSMSSS தாதமுறை - அடிமை முறை