பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நமது கடன் மக்களினம் இவ்வுலகில் இனிது விாழ வாழ்நெறிகள் கூறுமொரு நூல்தான் யாது? தெக்கணத்துத் திருநாடு தமிழர் நாடு தெளிந்துரைத்த திருக்குறளே; அதையு ணர்ந்து பக்குவமா நாமனுகி மதித்துப் போற்றிப் பண்புரைக்குந் திருமறையாக் காத்தல் வேண்டும் பொக்கைமனங் கொண்டவர்கள் வள்ளு வற்குப் புண்செய்து திரிகின்றார் போதும் போதும் (9) கற்றுக்குட்டிகள் கற்றறிந்த சான்றோரும் திருக்கு றட்குக் கண்டுணர்ந்து பொருள்சொல்ல அஞ்சு கின்றார்; சிற்றறிவால் தமிழ்நூலின் பெயர்கள் தாமும் தெரியாதார் புத்துரைகள் சொல்லப் போந்தார் ! கற்றினங்கள் சிறுகுட்டை கலக்கல் ஆகும் கடல்தனையே சேறாகக் கலக்க எண்ணின் முற்றுறுமோ? நீந்துதற்குச் சிறிதும் கல்லார் முழுகாதீர் குறட்கடலுள் என்போம் என்போம் (10) சிலையானோம் ! கண்டபடி கண்டவர்கள் தமிழர் நூலைக் கதைக்கின்றார் குழப்புகின்றார் கேட்பா ரில்லை; மண்டையடி கொடுப்பதற்கோ சங்க மில்லை; மனம்வைத்துக் காப்பதற்கோ அரசும் இல்லை; உண்டபடி உறங்குகின்றார் மக்கள் எல்லாம் உய்வதுதான் எப்படியோ தமிழும் நாமும் ? அண்டையர்கள் மொழிகாக்கும் முறைமை கண்டும் அசையாத சிலையானோம் அந்தோ! அந்தோ! (11)