இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
113 அரிபோல் எழுவோம் இனியேனும் திருக்குறளை மதிப்போம் காப்போம்: இனிதான அறநெறியை உரைப்போம் கொள்வோம்; கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம்; கடுகிவரும் பகையுளதேல் எதிர்ப்போம் மாய்ப்போம்; தனியான நிலையொழித்து வருவோம் சேர்வோம்; தமிழ்நாடு நமதாக முயல்வோம் வெல்வோம்; குனியாத மனனோடு வளர்வோம் வாழ்வோம்; குகைவாயில் அரிபோல எழுவோம் நாமே. (12)