பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 அரிபோல் எழுவோம் இனியேனும் திருக்குறளை மதிப்போம் காப்போம்: இனிதான அறநெறியை உரைப்போம் கொள்வோம்; கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம்; கடுகிவரும் பகையுளதேல் எதிர்ப்போம் மாய்ப்போம்; தனியான நிலையொழித்து வருவோம் சேர்வோம்; தமிழ்நாடு நமதாக முயல்வோம் வெல்வோம்; குனியாத மனனோடு வளர்வோம் வாழ்வோம்; குகைவாயில் அரிபோல எழுவோம் நாமே. (12)