பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 கோவலர்தம் செவ்வாய்க் குழலோசை கேட்டவுடன் ஆவலுடன் ஓடிவரும் ஆனிரைகள் சேர்நாடு; மருத வளம் சேற்றில் உழுது சிறுநெல் விதைதுரவி நாற்றுப் பிடுங்கி நடுகாலில் நட்டுக் களையெடுத்து நீர்பாய்ச்சிக் காப்பதனால் நன்கு விளைகழனிச் செந்நெல் வியனுலகைக் காக்குமகம்: செங்கரும்புச் சாறெல்லாம் சேர்ந்தோடிப் பக்கத்துப் பொங்கிவரும் வாழைமரப் பாத்தி புகுவதனால் காய்க்குங் குலையில் கரும்பினிமை தானேறும்; வாய்க்குங் கமுகினங்கள் வானுயர்ந்த தென்னை என எண்ணும் படிவளரும்; எவ்விடத்துஞ் சோலைவளம், உண்ணும் பழமரங்கள் ஊரெல்லாம் தோன்றுதலால் காணும் இடமெல்லாம் கண்குளிரும் காட்சியதாய்த் தோணும் மருதவளம் சூழ்ந்திருக்கும் இந்நாடு: நெய்தல் வளம் முப்பாலும் ஆழியுண்டு மூழ்கியதன் உட்சென்றால் தப்பாமல் முத்துண்டு சார்ந்த பவழமுண் டாறு சுவையுள் அரிய சுவையாகக் கூறுமுயர் உப்புக் கொழிக்கும் அளமுண்டு; நாடெல்லாம் சுற்றி நலங்கொழிக்கும் வாணிகத்தால் ஏடெல்லாம் ஏத்த எழிற்கலங்கள் ஒட்டுதற் கேற்ற துறைமுகங்கள் எத்துணையோ ஈங்குண்டு; போற்றும் படியாய்ப் புவியிற் பெரும்பரப்பாய் ஒதுங் கடற்கரைகள் ஒன்றிரண்டாம் அன்னவற்றுள் ஈதும் ஒரு கரையென் றெண்ணத் தலைநகரில் கோவலர் - ஆயர்