பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வானத்து வெண்ணிலவாய் நானி ருப்பேன் வட்டமிடும் உறவினர்கள் விண்மீன் ஆவர்; கானத்துப் பழுமரத்தில் கனிகள் உண்ணக் கடுகிவரும் பறவையினம் போலச் சூழ்வர்; பூநத்தும் தேனீக்கள் கூட்டில் மொய்த்தல் போற்கிளைஞர் பெருங்குழுவாய் வீட்டில் மொய்ப்பர்; தேனொத்த வெல்லத்தை மோப்பங் கண்டு தேடிவரும் எறும்பினத்தின் சாரை போல்வார்; (6) ஆவணியில் காதணிநாள் நிகழ்த்த எண்ணி ஆய்ந்தொருநாள் தேர்ந்தெடுத்து நெஞ்சிற் கொண்டு பாவை நிகர் என்மனையாள் செவியிற் சொன்னேன்; பாய்ந்தோடி உறவினர்கள் ஆடி மாதம் போவதன்முன் தம்குடும்பம் சுற்றம் சூழப் புகுந்தார்கள்; திடுக்கிட்டுத் துணையைப் பார்த்தேன் தேவையிலை இனியழைப்பு, செலவு மிச்சம்' என்றுரைத்தாள் தேன்மொழியாள்; திகைத்து ನಿನ್ಜ சாதியினை ஒழிப்பது நம் கடமை என்று தக்கவளைக் கலப்புமணம் செய்து கொண்டேன்; காதலினால் பூத்தமனம் உறவினர்க்குக் கடுகளவும் நறுமணமாய்த் தோன்ற வில்லை; வேதநெறி பிழையாத அன்னார் என்றன் வீட்டுக்குள் வந்துவிடின், என்முன் நின்றே ஏதமிலாச் செயலாற்றும் கொள்கை வீரர் என்றெல்லாம் பட்டங்கள் வழங்கிச் செல்வார் (8) பூந்த்தும் - பூவை விரும்பும்