பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 23 உள்ளொன்றும் புறமொன்றும் பேசி நிற்கும் உறவினரைப் படைக்கின்ற தெய்வம் ஆகி வெள்ளைநிறம் கொண்டிங்கே உலகை ஆட்டி விளையாடும் பணநாதன் கடைக்கண் நோக்கம் துள்ளிவிளை யாடுவதால் என்மேற் குற்றம் துணிந்துரையார்; பகைமாற்றி உறவை ஆக்கும் வெள்ளையப்பன் புரிகின்ற விளையாட் டெல்லாம் விரித்துரைப்பின் விந்தையினும் விந்தை யன்றோ ! (9) உறவான ஒருவர்.திரு மனத்துக் காக ஒள்ளிழையை மக்களுடன் அழைத்துச் சென்றேன், மெருகோடு விளங்குமுயர் உந்து வண்டி விட்டிறங்கி நிற்பதன்முன் மணத்து வீட்டார் வருகவரு கென்றெனக்கு மாலை சூட்டி வரவேற்ற காட்சியினைக் கண்டோர் அங்கு வருகின்ற மன மகனோ என்ற யிர்த்து, வாழ்வரசி அருகிருக்க ஐயம் விட்டார் (10) நான் பெற்ற செல்வத்தை எடுத்துக் கொஞ்சி நலமிக்க கன்னத்தைச் சிவக்க வைத்தார்; தேன் பெற்ற சொற்பேசும் சித்தி சங்கள் தெளிவாகத் தங்களையே வார்த்தெ டுத்தாற் போன்றிருக்கக் காண்கின்றோம். என்று சைத்தார்; புதல்வரெல்லாம் என் மனையாள் போன்றி ருந்தும் தேன் சொட்டப் புனைந்துரைத்த உறவின் மாந்தர் திருவிளையாட் டெடுத்துரைத்தல் இயல்வ தொன்றோ? (11) ஒள்ளிழை - ஒளிபொருந்திய நகைகளை அணிந்த மனைவி அயிர்த்து - ஐயங்கொண்டு