பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தண்ணிரோ வெந்நீரோ குளிப்ப தற்கு? தமக்கென்று தனியறையும் ஒதுக்கி விட்டோம் ; உண்பீரோ இவ்வுணவு? களைத்தி ருப்பீர் ! ஒய்வுகொளத் துயிலுங்கள்' என்று ரைத்து மண் மகளைக் காணாது விரித்து வைத்த மலர்மெத்தை தலையணைகள் காட்டி நின்று பண் பாடி அருகிருந்து தாளம் போட்டுப் பல்வரிசை காட்டுகிற உறவு கண்டேன் (12) விரைந்துவரும் பொழுதத்துச் சட்டைப் பொத்தான் விட்டுவந்தேன்; உறவினர்கள் அதனைக் கண்டு மறைந்திருந்து பேசுகின்றார் அடடா இந்த மனிதரிடம் எளிமையைத்தான் காண்பீர்! செல்வம் நிறைந்தவர்கள் இப்படித்தான் இருத்தல் வேண்டும்; நிறைகுடங்கள் எப்போதும் தளும்பா அன்றோ? குறைந்தவர்தாம் கூத்தடிப்பர்’ என்று தம்முள் கூறுவது செவியில்விழ நகைத்துக் கொண்டேன் (13) சின்னாளில் வணிகத்தில் நட்டங் கண்டேன் சேர்ந்தடித்த பெரும்புயலால் வயல்கள் கெட்டேன் பொன்னகைகள் மாளிகைகள் ஒற்றி வைத்தேன் பொருள்முட்டுப் பாடடைந்து துயரால் நொந்தேன்; எந்நாளும் என்வீட்டில் உண்டு வந்த எண்ணில்லா உறவினரைக் காண வில்லை; பின்னோடித் தேடினுமே அஞ்ச லென்று பேசுதற்கோர் ஆளில்லை தனித்து நின்றேன் (14) ■ -" -- அஞ்சல் - அஞ்சாதே