பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தன்னுரிமை வேண்டுமென நினைவோ ரெல்லாம், தம்மைப்போல் மற்றவரும் விழைவ ரென்று மன்னுயிரின் உரிமைஎலாம் மதித்தல் வேண்டும்; மானமுடன் தன்னுரிமை போற்ற லாலே பன்னரிய பொதுவுரிமைக் கிடுக்கண் செய்தல் பகுத்தறிவுக் கொவ்வாத உரிமை யாகும்; சின்ன ஒரு புழுவேனும் உரிமை காக்கச் சீறுவதை நம்கண்ணால் காணு கின்றோம் (9) பெண்ணுரிமை தற்காத்துத் தற்கொண்டான் தன்னைப் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்வ கற்றிக் கற்கின்ற நூல்கற்றுக் கணவன் நெஞ்சக் கருத்துணர்ந்து கணிகின்ற அன்பு காட்டி இற்காத்தல் மாதர் தமக் குரிமை யாகும்; இகழ்வாகப் பிறர்பேச ஊரைச் சுற்றிப் பற்காட்டி உடல்மினுக்கிப் பண்பு கெட்டுப் பகட்டுவதைப் பெண்ணுரிமை என்று சொல்லார் (10) மாணவரும் தொண்டரும் கற்கின்ற மாணவர்க்கும் உரிமையுண்டு கடமைகளும் உண்டென்று கருதல் வேண்டும்; கற்பிக்கும் ஆசானை மதிக்க வேண்டும் கல்வியினில் கருத்துன்றிப் படித்தல் வேண்டும்; முற்போக்குக் கட்சிகளில் தொண்டர் கட்கும் முழுவுரிமை உண்டெனினும் தலைவன் சொல்லில் நிற்கின்ற நிலைவேண்டும்; உரிமை வேட்டோர் கடமையையும் நெஞ்சிருத்தின் நாடு நன்றாம் (11)