பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழெழுதிச் சோறுண்டு வாழ்ந்தி ருப்போர் தனிமொழியைத் தாய்மொழியை இகழ்ந்து பேசித் தமிழகத்தில் தமிழில்எழுத் தாளர் ஆவர்; தப்பின்றிக் கலப்பின்றி எழுதும் முன்னோர் தமிழெல்லாம் பழித்துரைக்கும் கயமை யிங்கு தழைப்பதுவோ உரிமை? அது மடமை; எங்கள் தமிழிகழ்வோர் நாவடக்கக் கொதித்துப் பாயும் தன்மானம் உடமையன்றோ உரிமை யாகும் (15) எழுத்தாளர் நெஞ்சத்தில் உரிமை வேண்டும்; எப்படியோ உண்டுடுத்து மற்றோ ரைப்போல் பிழைத்தாலே போதுமென எழுதிக் கொட்டி வால்பிடித்துப் பின்செல்லல் உரிமை யன்று; வழுக்காணின் அஞ்சாமல் எழுதி, வாய்மை வாழ்வதற்கு வழிவகுத்தல் உரிமை யாகும்; இழுக்கான நடையெழுதிப் பிறரைத் தாக்கி எழுதுவதே தொழிலாதல் உரிமையன்று (16) எழுத்துரிமை எனச்சொல்லி எழுதித் தீர்க்கும் ஏடுகளில் சிலவற்றைக் காணின் அங்குப் புழுத்திருக்கும் கயமைகளே காணும்; எண்ணும் புலன் நடுங்கும் கைநடுங்கும் கண்கள் கூசும்; கொழுத்தவர்கள் குடித்தனத்தில் நடக்குந் தீமை கொடுப்பதற்கோ செய்தித்தாள்? படிப்பார் நெஞ்சை அழுக்காக்கிக் கெடுப்பதற்கோ உரிமை? நல்ல அறிவுடையார் இச்செயலைச் சிறுமை என்பர் (17)