பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர் திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் தலைப்பு: வாழையடி வாழை - பாரதியார் இடம் சரபோசி மன்னர் கல்லூரி - தஞ்சை sräी : 21-2-1960 ப ா ர தி ய | ர் நேரிசை வெண்பா முருகா! முதல்வா! முத்தமிழில் நெஞ்சை உருகவைக்கும் மாணவர்காள்! உண்மை - மருவியநல் ஞானஞ்சேர் ஆசிரிய நல்லோரே என்கவியை நானுஞ்சொல் கின்றேன். நயந்து எண்சீர் விருத்தம் தமிழ் வாழ்த்து கவிதை எனுங் காதலிபால் உன்னைப் பெற்றேன் கண்ணம்மா! தமிழ்மகளே! முத்த மிட்டேன் கவிவெறியோ கள்வெறியோ அறிய கில்லேன் கனவுலகில் பறக்கின்றேன் தரையில் நில்லேன்; செவிபொருந்தும் விழிகண்ணிர் சிந்தக் காணின் செங்குருதி பீறிட்டென் னெஞ்சிற் கொட்டும் புவிபுகழும் நீகலங்கப் பார்த்து நில்லேன் போர்தொடுப்பேன் உனைக்காப்பேன் வாழ்த்தி நிற்பேன் = - முருகா - கல்லூரி முதல்வர் முருகையன்