பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மருத்துவர் வி. கே. இராமச்சந்திரனார் துணையோடு எல்லா வகையானும் உதவி புரிந்தார். அவ்வுதவி இயம்பத் திரா எற்ற்முடையது. புத்துயிர் கொடுத்த அவ்வித்தகரைத் தந்தை யாகவே கருதி வருகிறார் கவிஞர் காலத்தினால் செய்த ஞாலத்தின் பெரிதாகிய அவ்வுதவியை நாடொறும் எண்ணி உருகுகின்றார். 1962-இல் சென்னை சென்று திரைப்படத்துறையில், கண்ணாடி மாளிகை’ என்ற திரைப்படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதினார். எனினும் திரைப்படத் துறையில் நடக்கும் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்று, தம் இயல்புக்கு, அத்தொழில் சிறிதும் ஒத்து வராதது கண்டு, மறு ஆண்டே தமிழாசிரியப் பணிக்கு மீண்டார். 1966-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தாகக் கல்வித்துறையினரால் இ வ. ர் மீ து வழக்கொன்று கொண்டு வரப்பட்டது. விசாரணை நடைபெற்றது. அப் போது இந்தியை எதிர்ப்பவன்தான் நான். அதற்கு என் பாடல்களே சான்று ஆனால் இப்போது சாற்றப்பட்டிருக்கும் குற்றங்கள் பொய்யானவை. என்மீது பழி சுமத்துவதற்காக இட்டுக் கட்டப்பட்டவை' என்று வாக்குமூலம் கொடுத்தார். ஆய்வுக்குப் பின்னர் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. - இளமைக் காலத்தில் முருகனைப் பாடுவதே முத்தமிழ் கற்றதன் பயன் என்றிருந்த இவர் 1940-க்குப் பிறகு சமுதாயச் சூழல் - நாடு - மொழி இவற்றையே பாடிவரு கின்றார். சூழ்நிலையின் தாக்கமும், சுயமரியாதை இயக்க வேட்கையும், பாவேந்தர்பால் கொண்ட பற்றும் கடவுள் மேலிருந்த கருத்தை மாற்றிக் காலத்தின் தேவையைப் பாடவந்த கவிஞராக ஆக்கிவிட்டன. கலப்புமணத்தின் தேவையைப் பற்றி கவிதை பலபாடிய இவர் தாமும் கலப்புமணம் செய்துகொண்டு தம் பிள்னை கட்கும் கலப்புமணம் செய்வித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். 'அரியவாம் சொல்லிய வண்ணம்