பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நேரிசை ஆசிரியப்பா பரசு ரா மன் திருமண மாகித் திரும்புங் காலை நெறியில் ஒருவன் நின்று மறித்தனன் பொறிபடு விழியன் பூணுால் மார்பன் தவ வடி வுடையன் தருக்கும் கொண்டோன் பவவினை அறுக்கப் பரமனை நாளும் நினைவோன் கையில் நீண்ட வில்லின ன் அனையோன் மணவினை ஆர்ந்த குமரனை அணுகினன் இடியென ஆர்த்தனன் இளையோய் ! ஒட்டை வில்லை ஒடித்தனை என் கை காட்டும் வில்லை வளைத்திடு காண்போம் கேட்டோர் நடுங்க நீட்டினன் வில்லை; அன்பும் பணிவும் அரும்பிய நகையுடன் முன்புற நின்றவன் மூரிவில் வாங்கி வளைத்தனன் அதனை; வளைந்த(து) ஆணவம் களைத்தன ன் துறவி கடுமொழி துறந்தான் சினமும் தொலைந்தது சிறியவன் முன்னே மனவலி குன்றி மரமென நின்றான்; அருளும் தவமும் ஆண்டவன் வரமும் பொருளும் புகழும் பிறவும் பெறினும் செருக்கும் தருக்கும் சேரின் ஒறுக்கும் ஒறுக்கும் உண்மை அறமே. (9) கலித் துறை குகனு:ம் பரதனும் ஒடு புனற்கிடை ஒடம் விடுத்திடும் ஆழ்கங்கை வேடர் களுக்கிடை வீரம் நிறைத்திடும் வில்லாளன் நாடு கொடுத்திடும் நாயகன் என்றிவர் தோழமையால் மூட மதிப்படு சாதி தொலைத்தனர் முன்னின்றார் (10) பவ வினை - பிறவிக்குக் காரணமாகிய வினை குமரன் - இராமன் மூரிவில் - வலிய வில் ஒறுக்கும் - தண்டிக்கும் வில்லாளன் - குகன்