பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 எனவுரைத்தாள்; பொங்கலோ? என்றெழுந்தேன்; ' இல்லை மனவருத்தம் பொங்கலலால் மற்றில்லை பக்கத்துப் பெண்ணொருத்தி நெஞ்சிரங்கிப் பேருதவி செய்தமையால் உண்ண வழியுண் (டு) ஒருநா ழிகைபொறுப்பீர்! - ஆக்கிப் படைக்கின்றேன். அத்தான் என; அவளை நோக்கிமுகம் தாழ்த்திப்பின் நூலெடுத்தேன் பாப்புனைய சித்தம் கலங்கியதால் சீர்தளைகள் மாய்ந்தனவே எத்துயரம் வந்தாலும் எல்லை கடந்தறியேன் பாவை நிறுத்திவிட்டேன்; பையன் சிறுவனை என் பாவை அடிக்கப் பதறுவதைக் கேட்டெழுந்(து) ஏனடித்தாய்? என்றேன்; திருடியதால்’’ என்றவுடன் நான்துடித்து நாமடித்துச் செய்தனையோ? என்றதட்ட , ஆமாம், பசியப்பா அன்னம் திருடிவிட்டேன் தீமை இனிச்செய்யேன் சீற்றம் தவிர்’’கென்றான்; வாயடைத்துப் போயினேன்; வாழ்வில் உணவின்றேல் தீயன தாம் பல்கும், திருட்டுத் தொழில்பெருகும் என்றுணர்ந்து மன்னித் திளையவனை விட்டுவிட்டேன்; முன்றில்முன் என் சிறுவர் மோதி அடிதடிகள் செய்திருந்தார்; சீறிச் சினந்துரைத்தேன்; ஒர்சிறுவன் மெய்யுரைத்தான்; ' என்னின் மிகுபண்டம் அண்ணனுக்(கு) அன்னை கொடுத்தாள், அதனால் பிணக்குற்றோம் என்னை அடிக்காதீர்!’ என்றுரைத் தோடிவிட்டான்; ஒஓ! அதுசரியே, ஒரிடத்தில் உண்டிமிகின் ஓவாப் பகைமூளும், ஓநாய்ச் செயல்விஞ்சும், பாரிற் சமமாகப் பாத்துாண் கொடுத்துவிடின் போரில் இறங்குகின்ற புன்மைகள்தாம் உண்டோ? பாத்துரண் கொடுத்து விடின் - பகுத்து உணவு கொடுத்து விட்டால்