பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பு : வாழ்க்கை வளமுற - உணவு இடம் : வானொலி நிலையம் - திருச்சி நாள் 2-3-1956 &Ꮲ _ 6y GaᎥ கலிவெண்பா உணவுதனைப் பற்றி உயர்கவிதை யாக்கக் கனவுலகிற் சென்றேன்: கடும்பசியோ என்வயிற்றில் ஆடித் திரிந்துழல ஐயையோ என்புலமை ஓடித் தறிகெட் டொருசொல் வரக்காணேன்: பாழ்பசி வந்துவிடின் பத்தும் பறந்துபோம் சூழ்நிலையை இன்றுணர்ந்தேன்: தூய மனத்தெளிவும் பொங்கும் கவியுணர்வும் பூரிக்கும் நன் மகிழ்வும் தங்குமோ இவ்வுலகில் சாரும் உணவின்றேல்? அன்பேது? நெஞ்சில் நிறைவே(து)? அறிவமைதி என்பதுதான் ஏதேது? வாழ்க்கை வளமெய்த உண்டியொன்றே வேண்டுவ(து): உண்மையி தென்பதனைக் கண்டுணர்ந்தேன் ஆதலினால் கால்வயிறே னும் நிரப்பிச் செய்யுள் புனைவமெனச் சிந்தித்துச் சேயிழாய்! உய்யும் வகையுண்டோ உண்டி சிறிதுண்டோ? எனறேன்; செவியேற்ற ஏந்திழையாள் ஓடிவந்து சென்ற முதல்நாளிற் செய்தபடி செய்தேன்’ ’