பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர் : அண்ணல் பு. அ. சுப்பிரமணியனார் தலைப்பு : வள்ளுவர் வாக்கில் - நட்பு இடம் : குறள்விழா - காரைக்குடி நாள் : 22–7–1956 ந ட் பு எண் சீர் விருத்தம் அகத்துக்கண் மாசிலராய் , இன்னாச் சொற்கள் அழுக்காறு வெகுளி அவா. நான்கும் நீக்கித், தொகுக்கின்ற செல்வத்தால் ஈத்து வந்து, தொண்டொன்றே பேணிவரும் தலைவ ரேறே! மிகப்பழைய தமிழ்காக்க அறப்போர் ஆற்றும் o வேங்கைஎனும் கவிமணிகாள்! அரங்கம் காணத் தொகுப்பாக இவண் வந்தீர்! தமிழ வேளே! தொழுதெனது கவிதைகளைப் பாடு கின்றேன் (1) வேண்டும் நட்பு வளர்பிறையின் இயல்பினதாய் , புலமை சான்றோன் வகுத்துரைத்த நூல்நயம்போல் இனிமைத் தாகித் தளர்நிலையில் உடுக்கை இழந் தவன் கை போலத் தானே வந் துதவுவதாய் , அகம்ம லர்ந்து வளருவதாய், மிகுதிக்கண் இடித்து ரைத்து வாழ்வுதரும் பண்பினதாய் , நற்கு ணத்தின் விளைநிலமாய்ப் பழிநாணு கின்ற நட்பே விழைகஎன வள்ளுவப்பே ராசான் சொன்னான் (2) SM MSMSM SMSMSMSMS தமிழவேள் - அரங்கில் அமர்ந்திருந்த திரு. பி. டி. இராசன்