பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பு: வள்ளுவர் வழியில் திரு. வி. க. இடம் : குறள் விழா - காரைக்குடி நாள் ; 11-8-1957 திரு. வி. க. எண்சீர் விருத்தம் குறளென்னுஞ் சொற்பொருளைச் சிறிதுங் காணார் குலவுதமிழ் இலக்கணத்தை என்றுங் கேளார் அறநூலோ பிற நூலோ ஒன்றுந் தேறார் அகரமுதல் வரிசைமட்டும் தெரிந்தாற் போதும் குறளிடத்துக் குறைசொல்வார் திருத்தம் செய்வார் புத்துரையுங் குறித்துரைப்பார் திருக்கு றட்குப் பிறவுரைகள் சரியில்லை பிழையே என்பார் பெருகிவரக் காண்கின்றோம் இந்த நாளில் (1) கற்றற்குத் தகுநூல்கள் கசடு நீக்கிக் கற்றுப்பின் அவைசொல்லும் வழியில் நின்று முற்றுமுனர் அறிவினராய் வாழ்ந்து காட்டி முதற்புலவன் வள்ளுவன்செய் குறள்நூ லுக்குத் தெற்றெனுமா றுரையெழுதிக் காட்டி அந்தத் திருநெறியில் திரு. வி. க. வாழ்ந்து நின்ற பெற்றியையான் ஓரளவு தெரிந்த வண்ணம் பாடுகிறேன் பிழையுளதேல் பொறுத்தல் வேண்டும் (2) தெற்றெனுமாறு - தெளிவாக பெற்றி - இயல்பு