பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கடவுட் கொள்கை ஒரு நூறு சமயங்கள் படைத்துக் காட்டி உட்கிளைத்த சமயங்கள் பலவுங் கூட்டிப் பெருமைசொலி அத்தனைக்குந் தெய்வங் கண்டு, பெண்பார்த்து மணமுடித்துப் பிள்ளைப் பேறும் உருவாக்கி, ஒருசிலரை இரண்டாந் தாரத் துட்படுத்திப் பிறர்மனையை நாட வைத்துச் சிறுவர்விளை யாடலென ஆடிவிட்டுச் செம்மைநெறி காணாமல் திகைத்து நின்றோம் (3) இருள்சேர இவ்வண்ணத் திகைக்குங் காலை எழுந்ததுவோர் செம்பரிதி, உலகுக் கெல்லாம் மருள் போக ஒளிதந்து கடவுட் பாங்கை மறுவறநன் குணர்த்திற்று; செம்மை கண்டோம்; திருவுடைய வள்ளுவனாம் பரிதி காட்டும் திருநெறியே திரு.வி.க. வேண்டி நின்றார் திருநீறு பொலிநெற்றி உடையா ரேனும் தெய்வநெறி பொதுநெறியே கூறி வந்தார் (4) குறள் நெறியர் அழுக்காறும் அவா.வெகுளி இன்னாச் சொல்லும் அகற்றியநன் மனத்துக்கண் மாசொன் றின்றி , ஒழுக்கமுயிர் என ஓம்பி, அறமே போற்றி, உள்ளத்தாற் பொய்யாமல் ஒழுகி, என்றும் வழுக்காமல் குணமென்னும் குன்றில் ஏறி, -- வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, நெஞ்சில் தழைக்கின்ற செந்தண்மை பூண்ட ஒன்றால் தகவுடைய அந்தணராய் விளங்கி நின்றார் (5)