பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அவையடக்கம் முன்னை எழு வள்ளல்தமைச் சங்கச் சான்றோர் முழுமையுறு செந்தமிழால் புகழ்ந்துரைத்தார் என்னையுமோர் வள்ளல்புகழ் பாடச்சொல்லி ஏற்றமெனக் களித்தமைக்கு நன்றி; ஆனால் முன்னையவர் பொருள்கொண்டு, மகிழ்ந்து, வள்ளல் முன்னின்று, விலையில்லாக் கவிதை சொன்னார்; என்கவிக்குப் பொருளில்லை; அவனும் இல்லை எனினும்உயர் புகழுக்கே பாடுகின்றேன் (3) என் குலத்துப் பாவலர்தம் பனுவல் எல்லாம் ப எழுவள்ளல் செவிகுளிரக் கேட்டார் அந்நாள்; என்கவிக்குச் செவிகொடுக்க அழகன் இல்லை i. ஏங்குகிறேன்; அவனுயிரைக் குடித்த காற்றே! பொன்னுடலைச் சுவைத்தொளிர்ந்த தீயே! வானே! புல்லர்தமைப் பொறுத்திருக்கும் நிலமே! நீரே! தென்னகத்து வள்ளலிவன் செய்த தொண்டைச் சிறுசெந்நா விளம்புவதைக் கேட்பீர்! கேட்பீர்! (4) _ அவையடக்கப் பாடலின் பின் இரண்டடிகள் ஏற்றங் கூறுவது போலமைந்து அவையடக்கம் உணர்த்துகின்றன. ஏற்றம் : சங்கத்தார் பொருள் பெற்றுப் பாடினர்; நான் பொருள் பெறாது பாடுகிறேன். சங்கத்தார் அரசர் முன்னின்று பாடியமையால் முகமன் உரைத்திருக்கலாம்; அழகப்பர் இல்லாதபொழுது நான் பாடுவதால் உண்மையான புகழையே பாடுகிறேன். மேலும் சங்கத்தார் கவிதைகள் விலை போகாதவை, அவையடக்கம் : சங்கத்தார் பாடல்களிற் பொருளுண்டு; என் பாடலிற் பொருளே இல்லை. அரசர் இருந்தமையால் மகிழ்ந்து பாடினர் அப் புலவர்; அழகப்பன் இல்லாமையால் நான் வருந்திப் பாடுகிறேன். அவர்கள் பாடல் விலைமதிக்க முடியாதவை; என் கவிதைகள் எளியன. எனினும் என் புகழுக்காகப் பாடுகிறேன்.