பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() () எழுவரா ? எண் மரா ே வரையாது வழங்குகொடை வள்ளல் தம்மை வரையறுத்தார் முன்னாளில் எழுவர் என்றே: குறையாமல் கல்விக்கே கோடி கோடி கொடுத்துயர்ந்த அழகனுமோர் வள்ளல் ஆனான் கரவாத பிறரெவரும் இருப்ப ரேல் இக் காலத்தும் உளரெழுவர் வள்ளல் என்பேம் பிறராருங் கானேமால், ஒருவன் நின்றான் பெருங்கொடைஞர் அறுவர்க்கு யாண்டுச் ఇG్క 5) ஆதலினால் முன்வகுத்த எழுவர் என்ற எண் மாற்றி அவருடனே எண்மர் என்போம்: ஒதுகின்ற மாணவரும் தேர்வுத் தாளில் உயர்வள்ளல் எண் மரென எழுதிப் போந்தால் பேதலியேம் மதிப்பெண்கள் உரிய நல்கிப் பெருங்கொடையால் வள்ளலென யாமும் வாழ்வோம்; ஏதமிலான் இத்துறையில் புரட்சி செய்தான் எவரிந்த அழகப்ப வள்ள லொப்பார்? (6) ஒரே வள்ளல் ! அன்றிருந்த கொடையாளர் எழுவர் தாமோ? ஆயிரவர் இருந்தமைக்கு நூல்கள் சான்றாம்; என்றாலும் வள்ளலெனும் பெயரைப் பெற்றார் எழுவர்க்கு மேலில்லை; இற்றை நாளும் துன்றியதம் பொருளிவார் பலர்தா மேனும் துணிந்துரைக்கின் வள்ளலெனும் புகழைத் தாங்கி நின்றிருக்க அழகப்பன் ஒருவ னேதான்; تعیی நெஞ்சிருப்போர் கைவைத்தால் இதயம் சொல்லும் (7)