பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரியார் புகழ்ந்தார் முயன்றுபெறும் செல்வமெலாம் தமக்குப் பின்னர் முழுவுரிமை புதல்வர்க்கே ஆதல் உண்மை; அயர்வின்றி இவனுழைப்பால் கண்ட செல்வம் அவனுக்கே சொந்தமெனப் பெரியார் நாவால் நயந்துரைக்கப் பெரும்பேறு பெற்றா னேனும் நான்சொல்வேன்: பட்டையந்தான் அவற்கே யன்றிப் பயன் முழுதும் நம்மக்கள் துய்க்கின் றாரால் பாடுதும் நாம் பாடுதும் நாம் வள்ளல் பேரே (14) நிலையாமையுணர்ந்தவன் நிலையாமை நிலையாமை என்று சொல்லி நிறைபொருளைத் தொகுப்பார்கள் வகுத்தல் காணார்: அலைவார்கள் இனுஞ்சேர்க்க மேலுஞ் சேர்ப்பர்; ஆனாலும் இன்பமொரு சிறிதுங் கானார்; அலையாழி பலகடந்தே இவனுஞ் சேர்த்தான் o அப்படியே வகுத்தளித்தான் தனக்கொன் றில்லான்; நிலையாமை நன்குணர்ந்தான் இவனே அன்றோ? நிலைத்த புகழ் இன்பமிகக் கொண்டு நின்றான் (15) அவனோர் கஞ்சன் ! பொருள்கொடுத்தான் மிகக்கொடுத்தான்; அதனின் மேலாப் புகழ்கொண்டான் ; கொடைசிறிது, சிறிய ஒன்றால் அருள் பழுத்தான் கொண்டதுதான் மிகுதி என்பேன்; அதிலென்ன வியப்புளதோ? மேலும் அன்னான் ஒருவகையில் கஞ்சனெனக் குறையும் சொல்வேன்; உவந்தளித்தான் நிதியமெலாம், உண்மை; ஆனால் வருபுகழில் சிறிதேனும் பிறர்க்கிந் தானோ? வருகின்ற புகழெல்லாம் வைத்துக் கொண்டான் (16) அ ழ க ப் ப ர் கல்லூரிகளுக்கே செல்வமெலாம் சேர்வதால் அச்செல்வம் அழகப்பருக்கே சொந்தமாகிறது என நகைச்சுவைபடப் பெரியார் பேசினார்.