பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 4 தமிழ்நாடு உலகோடு சமம் வண்மைமிகும் ஆய் தன்னால் நமது தெற்கு வடக்கோடு சமமாக நின்ற தென்றார்; உண்மையிது; நானொன்று துணிந்து சொல்வேன்; உறங்கினுமோர் கொடைக்கனவே காணும் நம்பன் வண்மையினால் உலகோடு சமமே என்பேன்; வடக்கென்ன கிடக்கட்டும் என்று ரைப்பேன்; பெண்மையுளார் அஞ்சிடுவர் ஆண்மை கொண்டேன் பேசுகின்றேன் பாடுகின்றேன் மறுப்பும் உண்டோ? (20) மாசு து ைடத்தேன் கொடைத்திறத்தால் புகழ்கொண்டான் பாரி வள்ளல் குவலயத்தில் அவன் புகழே விஞ்சக் கண்டு படைத்திறத்தால் முடியரசர் வேந்தர் மூவர் பாரியின்மேல் அழுக்காறு கொண்டு கோட்டைக் கடைத்திறப்பு நிகழாமற் சூழ்ந்து நின்றார்: கண்டபயன்? மா சொன்றே! கோட்டை யூரன் கொடைச் சிறப்பால் அரசர்சிலர் அழுக்கா றுற்றார் மாசுற்றார் என்கின்ற கொடுஞ்சொற் கேட்டேன் (21) வள்ளலுக்கு முடியரசர் விளைத்த தீமை வடுவாக அமைந்ததுவே! உலக மக்கள் எள்ளலுக்கும் பொருந்தியதே! என்று நெஞ்சில் எழுகின்ற பரிவால் அம் மாசு நீக்க வள்ள ல்புகழ் முடியரசன் பாடு கின்றேன் , வண்டமிழாற் பாத்தொடுத்துச் சூட்டுகின்றேன்: மள்ளர்மிகு படைவலத்தாற் படைத்தார் மாசு: மகிழ்ந்தளிக்கும் தொடைநலத்தால் துடைத்தேன் மாசு (22) - கடைதிறப்பு என்பது எதுகை நயத்திற்காகக் கடைத் திறப்பு என நின்றது (கதவு திறத்தல்) மள்ளர் - வீரர் தொடை - தொடைகள் மிகுந்த பாநலம்