பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ೩EGöTL1Y G೫ Gör =--- • இறையன்பு நிறை மனத்தன் எனினும் தந்தை எனுந்தேவே தொழுதெழுவான்; உற்ற போது நிறையன்பு கொண்டவரை, ஊக்கந் தந்து நிலைநிற்கச் செய்தவரை மறவா நன்றி யறிவுடையன் என்பதனை விடுதி காட்டும்; அரசியலில் பிற துறையில் ஆன்ற சான்றோர் செறிநண்பு கொண்டமையைப் படங்கள் காட்டும்; சிரித்தமுகம் அவன் மனத்துத் துாய்மை காட்டும் (23) அனைத்தும் ஈந்தான் -- அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடு நோய்க்கே ஈந்தான் அந்தோ! வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும் உயிருளதே கொள்கவெனச் சாவுக் ந்ேதான் (24) அ; ஜகப் பா நகரம் சாந்துணையும் ஈந்திருந்தோன் புகழைச் சாற்றச் சான்றோர்கள் பலர்வேண்டும்; ஒருவன் என்னால் ஆந்துணையோ? சில பாடல் முற்றுஞ் சொல்ல அமைவாமோ? காவியமே சிறிது சாலும்; போந்துள்ள பெருமக்காள்! உம்மை ஒன்று போற்றிமிக வேண்டுகிறேன்; இந்த வட்டம் சூழ்ந்துள்ள, பகுதியையும் ஒன்றே ஆக்கி அழகப்பன் நகரெனப்பேர் சூட்டு வீரே (25) உற்றபோது - துயருற்றபோது அழகப்பர் நகர் எனப் பேர் சூட்டும் கவிஞரின் இவ்வெண்ணமும் பலித்து விட்டது. இப்பாடல்களைக் கேட்ட அடிகளார் முடிவுரையில் உணர்ச்சி வயப்பட்டு அழுது விட்டார்.