பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பு : தமிழ் வாழ்வு இடம் : எழுத்தாளர் மன்றம் - மதுரை 円6T : 28–9–1958 தமிழ் வாழ்வு எண்சீர் விருத்தம் தமிழ் பழுத்த சான்றோரும் மன்னர் தாமும் சங்கத்தால் தமிழாய்ந்த கூடல் தன்னில் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் மன்றத் துள்ளோர், சாற்றினிமைக் கவிபுனையும் கவிஞர் கூட்டம், தமிழ்த்துணையே கடவுள்துணை என்றி றைஞ்சும் தவமுனரிவர், நாவலராம் எங்கள் தோழர், தமிழ்திளைக்கும் மதுரைநகர்ச் சான்றோர் மாதர் அனைவர்க்குத் தலைதாழ்த்தி வணங்கு கின்றேன் (1) п е път (В தென் பொதிய மலைப்பிறந்து முல்லை தோய்ந்து தெருவெல்லாம் மணம்பரப்பும் தென்றல் நாடு; தொன்மைமிகு கடல்மூழ்கிக் குளித்தெ டுத்துத் து ய மணி முத்தாரம் அணியும் நாடு: வன் மைகொடு எ வர்வரினும் போர்வாள் தாங்கி வாகையுடன் முரசொலியை முழக்கும் நாடு; மென்மைமிகு தமிழ் எழிலை வளர்க்கும் மன்றம் மேலோங்கும் நம்நாடு தமிழநாடு (2) தவ முனிவர் - அரங்கில் இருந்த குன்றக்குடி அடிகளார் நாவலர் - அரங்கில் இருந்த திரு. நெடுஞ்செழியன் முல்லை, தென்றல் முத்தாரம், போர்வாள், முரசொலி, எழில், மன்றம், நம் நாடு, தமிழ்நாடு என்னும் இதழ்களின் பெயர்களும் தோன்றப் பாடியது.