பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. இன்றைய நிலை இந்நாட்டைத் திராவிடநா டென்றுஞ் சொல்வன் இயல்புடைய நல்லறிஞர்; இந்த நாட்டில் முன்கூட்டி மூத்தகுடி தமிழர் என்போர் நாகரிக முதிர்ச்சியினில் வாழ்ந்த நல்லோச் இன்யூட்டும் தமிழ்வாழ்வைப் பாடுங் காலை இதயத்தால் பூரித்தேன்; ஆனால் இன்று பின்பாட்டுப் பாடுகிற தமிழன் வாழ்வைப் பேசுதற்கும் நாணுகின்றேன் கூசு கின்றேன் (3) இருவேறு வாழ்வு உயிர்பெரிதா ? உன் மானம் பெரிதா ? என்றால் உயிர்சிறிது மானந்தான் பெரிதே என்பான் ; உயிர்கொடுத்தும் தன் மானம் ஒன்றே காப்பான் ஒருவாழ்வே தமிழ்வாழ்வு; குறளின் வாழ்வு: துயர்வருமேல் மானத்தை விலையாக் கூறித் துணிமணிகள் உணவுவகை நிறையப் பெற்று வயிறு வளர்க் குந்தொழிலால் உயிரைப் பேணி வாழ்வதுவா தமிழ்வாழ்வு? மனுவின் வாழ்வு (4) தன்னினத்தின் ஒருமகனைத் தமிழன் தன்னைத் தருக்குடையான் பிறநாட்டான் இழித்து ரைத்தால் என்னினத்தை இகழ்ந்தவனை விட்டு வையேன் - என்றெழுந்த மறவாழ்வே தமிழ வாழ்வு: தன்னலத்தைத் தனிப்புகழைப் பணத்தைக் காசைத் தக்கபடி காப்பதற்குச் சூழ்ச்சி செய்து தன்னினத்தை மாற்றார்க்குக் காட்டிக் காலைத் தாங்குவதோ தமிழ்வாழ்வு? ஈன வாழ்வு: (5}