பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயல்வோம் வெல்வோம் தலைமைக் கவிதை எண் சீர் விருத்தம் செந்தமிழ்க் கோர் உயிர் நிலையாம் குறளைத் தந்த செந்நாவான் புகழ் பாடக் குழுமி யிங்கு வந்திருக்கும் பாவலரே! குறையாச் செல்வ வளந்தழைத்த அருள் பழுத்த தேவகோட்டை தந்திருக்கும் பெருமக்காள்! ஈர நெஞ்சத் தாய்க்குலத்தீர்! வள்ளுவர்க்குத் திருநாள் செய்ய முந்தி எழும் ஆர்வத்தீர்! உங்கட் கெல்லாம் ழுழுமனத்தால் வாழ்த்துரைத்து நன்றி சொல்வேன் (க) செட்டிங்ாடு பழமைபெறு முக்கனிபோல் இனிக்கும் எங்கள் பைந்தமிழின் இசைவளத்தை வஞ்ச நெஞ்சம் குழுமியொரு கூட்டமைத்து மறைத்து விட்டுக் கொடுமைசெயக் கண்டிருந்தும் தாளம் போட்டோம்; முழுமதியைக் கருமுகில்கள் சூழ்ந்து வந்து முகமறைத்த பொழுதத்துச் சிதறி ஒட எழுவளிபோல் பகைவிரட்டித் தமிழ்மொ ழிக்கே இசைவளர்த்துப் பெருமைகொண்ட திந்த நாடே )ه-( 97