பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியாமை இருளகற்றி மக்கள் நெஞ்சில் அறிவொளியைச் சிந்திக்கும் ஆற்றல் தன் இனக் குறையாமல் கொடுத்து தவும் கல் விக் காகக் கோவில் களை உருவாக்கும் அரசர் தம் ைம வரையாமல் வழங்கியருள் வள்ளல் தம்மை வளர்த்துவிட்ட தெந்நாடு? சிற்பப் பாங்கு மறையாமல் காட்டிவரும் கோவில் கட்டி மாண் புகொண்ட தெந்நாடு? செட் டி நாடே (உ) வாழ்க ! வாழ்க ! இந்நாட்டுப் பழம்பதியாம் இவ்வூர் தன்னில் எத்துணையோ அறமென்றும் திரு நாள் என்றும் பொன்போட்டுச் செய்து வரல் கண்டோம் ; இன்று புலவனுக்குத் தமிழ்மொழிக்கு மக்கள் வாழ அன்பூட்டி அறமுரைத்த திருக்கு றட்கும் ஆர்வத்தால் ஒருமித்துத் திரு நாள் கண் டீர் ! என்பாட்டுத் திறத்தாலே வாழ்த்து கின்றேன் இமைபோலக் குறள்நெறியைக் காப்பீர்! வாழ் வீர்! (ச) மயிலும் வள்ளுவரும் மலர் விரிந்த குளிர் தென்றல் சோலை தன்னுள் மயிலொன்று தோகை விரித் தாடக் கண்டேன் ; சிலர் வந்தார் எனேச்சூழ்ந்து , மயிலைக் கண்டு சிந்தைதனைப் பறிகொடுத்தார் புகழக் கேட்டேன் குலவியநல் தோகை எழில் ஒருவர் சொன்னர், கொண்டைஎழில் மிக நன்றென் ருெருவர் சொன்னர், நலமிகுந்த வண்ணங்கள் ஒருவர் சொன் ர்ை, நடனந்தான் அருமை என மற்ருேர் சொன் னுர், (டு) 98