பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்டபடி : எண்சீர் விருத்தம் காதலிக்கும் ஆடவனே இரவுப் போதில் காண்பதற்கு மறைந்திருந்து வரவு பார்க்கும் காதலியைப் போல முழு நிலவுப் பெண்ணுள் கருமே கத் திரைமறைந்து முகத்தைக் காட்ட, ஏதமிலாத் தமிழொலிபோல் தென்றல் மெல்ல என்னுடலே வருட, உயர் மாடந் தன்னில் போதனைய பஞ்சனேயில் சாய்ந்து பாடல் புனைந்திட நான் ஆடவரை நினைந்தி ருந்தேன் (க) கலக்கமிலா உயர்நட்பு, பிறனில் வேண்டாக் கண்ணிய்ம்.ஓர் உடன்வயிற்றுப் பிறந்தோர் தம்முள் விலக்கமிலா துறுதுணையாய் நிற்றல், ஆள்வோர் வினை பிழைத்தால் இடித்துரைத்தல், பகைவர் நாப்பண் செலக் கருதின் அஞ் சாமல் பேசும் வன்மை, செஞ்சோற்றுக் கடன் கழித்தல் முதலாம் ஆண்மை இலக்கணத்தைக் கடவாதார் இருக்கும் நாடே ~ எழில்நாடாம் ; கடப்பவர்கள் இருப்பின் காடாம் (2-) 9