பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரிசை ஆசிரியப்பா பரசுராமன் திருமண மாகித் திரும்புங் காலே நெறியில் ஒருவன் நின்று மறித்தனன் பொறிபடு விழியன் பூனுால் மார்பன் தவவடி வுடையன் தருக்கும் கொண்டோன் பவவினே அறுக்கப் பரமனை நாளும் நினைவோன் கையில் நீண்ட வில்லினன் அஆனயோன் மணவினை ஆர்ந்த குமரனே அணுகினன் இடியென ஆர்த்தனன் ' இ8ள யோய் ! ஒட்டை வில்லை ஒடித்தனே ! என்கை காட்டும் வில்லை வளைத்திடு காண்போம் - கேட்டோர் நடுங்க நீட்டினன் வில்லை; அன்பும் பணிவும் அரும்பிய நகையுடன் முன்புற நின்றவன் மூரிவில் வாங்கி வளைத்தனன் அதனே ; வளைந்த(து) ஆணவம் க2ளத்தனன் துறவி கடுமொழி துறந்தான் சினமும் தொலைந்தது சிறியவன் முன்னே மனவலி குன்றி மரமென நின்ருன் ( அருளும் தவமும் ஆண்டவன் வரமும்

பொருளும் புகழும் பிறவும் பெறினும் செருக்கும் தருக்கும் சேரின் கலித் துறை குகனும் பரதனும் ஒடு புனற்கிடை ஒடம் விடுத்திடும் ஆழ்கங்கை வேடர் களுக்கிடை வீரம் நிறைத்திடும் வில்லாளன் நாடு கொடுத்திடும் நாயகன் என்றிவர் தோழமையால் மூட மதிப்படு சாதி தொலைத்தனர் முன்னின் ருள் (ίΌ) 12