பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்சீர் விருத்தம் வாலி மலைமுகட்டில் முகில்தவழும் உயர் கிட் கிந்தை மாநகரில் இறங்கியதும் மனமு டைந்தேன் கொ8லமுகத்த கூரம்பு நெஞ்சந் தன்னில் குருதியினைப் பாயவிட எண்ண மெல்லாம் நிலைமுகத்தால் பேசுகின்ருன் வாயுஞ் சோர்ந்தான் நெடுமலைபோல் புரள்கின் ருன் வஞ்ச நெஞ்ச வலைமுகத்துள் சிக்குண்டான் போலும் என்று வருந்தி அவன் யாரென்றேன் வாலி யென்ருன் (Dசு) ஏனிந்த நிலையென்றேன் ; உடன்பி றந்தார் இருவர்க்குள் நேர்ந்த பகை ** எனப்பு கன் ருன் ; வானிகந்த வலியானே எய்தோன் யாவன் ? என வினவ ஆண்டுளன்பார் என்று சுட்டக் கானிருந்த மரத்தடியில் வில்லைத் தாங்கி மறைந்திருந்த கரியவனைக் கண்ணுற் கண்டேன் ; நானிலத்தில் வீரனென்போன் மறைந்தம் பெய்தல் நல்லதுவோ? வீரத்திற் கிழுக்காம் என்றேன் (0.எ) முறுவலித்தான் அப்புலவன் ; விடையே யில்லை ; முணுமுணுத்தான் ' உடன்பிறப்புள் பிளவி ருந்தால் வருபவர்க்கு நல்விருந்தாம் நமது நாடு ; வம்பெதற்கு ? வாவா வென் றெனய ழைத்தான் ; கருவரைகள் பல கடந்தோம் கடல்க டந்தோம் கண்கவரும் எழில்மாட இலங்கை என்னும் பெருநகருள் புகுந்தோம்அங் கரண்மனைக்குள் பேசுகின்ற இடிமுழக்கம் கேட்டி ருந்தோம் )Oعےy( 14