பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிவுடையான் வணிகத்தால் அழகப்பன் அளகை அப்பன் வாழ்வடைந்தான் எனினும் அதில் மூழ்க வில்லை ; வணிகத்தில் பெரியதொரு இலாப மென்ருல் வருமுன்பே அத் தொகையைக் ' கொடுத்தேன் என்பான் துணிவகத்தான் மிகப்பெரிய இலக்கம் என்ற தொகைக்குரிய மதிப்பெல்லாம் குறைத்து விட்டான் பணிகுறித்துக் கொடுத்ததொகை எண்ணு வீரேல் பகர்ந்ததனைச் சரி என்பீர்! பொய்ம்மை இல்லை ! (ίδα-), பாரி இருவர் நனிசெல்வம் ஆங்காங்குக் கல்விக் காக தயந்தளித்த பேருள்ளம் கண்ட நாட்டார் நுனிமூக்கிற் சுட்டுவிரல் சேர்த்து, 'முன்னே நூலிலன்றி யாங்கனுமே கண்ட தில்லை ! இனிநமக்குப் பாரிஎன இருவர் கண்டோம்' என வியந்தார் ; அச்செம்மல் விழைவே போல இனிதெனப்பல் கலைக்கழகம் ஆதல் வேண்டும் இருநிலத்தில் அவர் புகழும் ஓங்க வேண்டும் (0க) பெற்ருேராளுன் கல்லூரி வட்டத்தில் இனிதி ருந்து கல்விபயில் பன்னூறு மக்கள் காண்பான் எ ல்லோரும் சான் ருேராம் என்று கேட்க இனியதொரு தாயா வான் ; ஆடல் பாடல் வல்லார் போல் மாணவர்கள் நிகழ்த்துங் காலே - வள்ளலிவன் தந்தையினும் மகிழ்வே கூர் வான் ; நல்லோனே நோய்முறிக்க வீழ்ந்த போதும் நயவுரைகள் நகைச்சுவையாய் வழங்கி வந்தான் (ίδ4") 59