பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாற்ருதே வாழ்க்கைத் துணைவியுனே வேண்டுகிறேன்; நேற்றே விளம்பி நெடுமூச்சு வாங்கவைத்தாய் ! இன்று விளம்பி எ டுக்கா தே என்னுயிரை ! ஒன்று திரண்டிங் குருவாகும் கற்பனையால் புத்துலக ஞ் செய்யப் புறப்பட்ட பாவளத்தைக் ! கத்திக் கெடுக் காதே கட்டழகி எட்டியிரு ! என்றுவாய் மூடவில்லை, ஏந்திழையாள் புன் ன கைத்து. நன்று கவிமணியே ! நான் விலகி நிற்கின்றேன். வீட்டைப் புதுக்க விதியில்லே, முன்னின்று \ நாட்டைப் புதுக்கவழி நாடு கிறீர் ! அவ்வழியைத் தெள்ளத் தெளிவாய்த் தெரிவை எனக்குரைப்பீர் ! உள்ளத் திருத்தி உணவை மறந்திருப்போம் ’’ என்ருள் அருகிருந்தாள் ; என்னுயிரே ! கூறுவன் கேள் : பொன்ரு நலம் பயக்கும் புத்துலகங் காண்பதெனில் புத்துலகம் காணும் வழி மாசு மறுவகற்றி மாண்பை மிகப்பெருக்கிக் காசு பனங்கொழிக்கக் கல்வி நலஞ்செழிக்க மேழித் தொழில் சிறக்க மீக் கூர் பசிபறக்க ஆழிக் கடல் வணிகம் ஆயிரம்பல் லாயிரமாய்ப் பல் கிவர வேண்டுமடி ! பாட்டால் முடிவதுவோ ? சொல்லும் வினைமுடிக்க நல்ல ரசே வேண்டுமடி ! புன் மைச் செயலொழித்து நன்மை புகவிடுத்தால் உண்மைப் புதுவுலகம் உண்டாகும் ஈதுண்மை ; ஆள்வோர் புகுத்துசெயல் அத்தனையும் நன்றே என் ருள் வோரே தீர்ப்பளித்தல் ஆமோ ? அரசியலில் வல்ல வராய் நாளே வருவதெலாம் காண்கின்ற நல்லவராய்க் கல்வி நலங்கொண்ட பேரறிஞர் 65