பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரணங்கோ ? எந்நாட்டாள் ? யாரென்று பேதுற்றேன் காரணங்கள் கண் டவுடன் என்னுட்டாள் என்றறிந்தேன்; தெளிவு சிற்றிடையில் காஞ்சிபுரச் சீலை உடுத்தியதால் சுற்றிமணி மேகலையும் சூழுவதால் மார்பகத்துச் சிந்தா மணி என்னும் செம்மணியைப் பூணுவதால் செந்தா மரைபுரையும் சீறடியில் மாண்புமிகு செஞ்சிலம்பு கொஞ்சுவதால் சேர்ந்தெனது நெஞ்சிலுறை வஞ்சியவள் கையில் வளையா பதிகலிக்கக் குண்டலமோ கா தணியாய்க் கூடி விளங்குவதால் கண்டாள் மேல் ஐயம் கடித கற்றி அம்மகள் தான் தென் ட்ைடுக் காரிகையே செய்ய தமிழனங்கே என்பாட்டிற் கூடும் தலைமகளே என்றுணர்ந்தேன்; புனல்தரு புணர்ச்சி வெற்பின் சுனே நீரால் வேட்கை தணிப்பதற்கு - முற்படுவாள் என்வேட்கை மூளுவதைத் தானறியாள் நீர்பருகுங் காலை நிலைதவறி உள் வீழ்ந்தாள் ஆர்வருவார் காப்பதற்கே ஐயகோ !” என்றரற்றத் தாவிக் குதித்தேன் தடந்தோளிற் கொண்டுவந்து நீவிக் கொடுத்தேன்; நிலையுணர்ந்தாள் நின்ருள் த8ல நிமிர்ந்து நோக்கிளுள் ; தையல் விழிதாம் கொ8லநின்ற அம்போ ? கொடுவாளோ ? கூர்வேலோ ? நெஞ்சத்துத் தைக்க நிலைதளர்ந்தேன் நோக்கினேன்; வஞ்சியவள் நாணத்தால் மண் கீறும் கால்விரலைப் பார்த்தாள்; அவளே நான் பாராமல் நிற்குங்கால் பார்த்து நகைசெய்தாள்; பாவையவள் பொன்னகையைக் 79