பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு மறவன் இருளடைந்த கண்களுக்கும் ஒளியை யூட்டி இடிகின்ற நெஞ்சத்தில் உறுதி ஏற்றி மருளடைந்த மதியினர்க்குத் தெளிவு கூட்டி மடி படிந்த தேகத்தில் வீரம் மூட்டிச் சுருள் நரம்பில் முருக்கேற்றிக் குருதி தன்னில் சூடேற்றித் தோளுக்கு வன்மை ஏற்றி ாது. அருள் கின்ற பாடலெலாம் ஆக்கித் தந்தோன் 'ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு’ மறவன் அன்ருே ? (சு) மன்னர் கோலம் எழில்முகத்தில் சுருள் மீசை வீரங் காட்டும்; இருவிழிகள் கனல் கக்கி ஏற்றங் காட்டும்; தொழில் கவிதை யாலுைம் மக்கட் குற்ற துயர்நீக்கும் செங்கோலாய்க் கைக்கோல் காட்டும் ; விழியுயர்த்த இருபுருவம் வில்லாய்த் தோன்றும் : வெண்மை தரு தலைப்பாகை மகுடங் காட்டும்; பழிதவிர்த்த பாடலெலாம் படைகள் காட்டும்; - பகை நடுக்கும் பேச்செல்லாம் முரசங் காட்டும்; (எ) அவன்ஆணை வலியற்ற தோளுடைய மாந்தர் தம்மை வகைகெட்டுக் கிலிபிடித்த நெஞ்சர் தம்மை நலிவுற்றுத் துயர்மிஞ்சச் சாதி நூறு நவில்கின்ற கொடு மனத்துச் சழக்கர் தம்மைப் பொலிவுற்ற வீட்டுமொழி கல்லார் தம்மைப் பொய்மொழிகள் உரைப்பவரைப் போபோ என்று புலியேற்றைப் போல்மொழிந்து வீரங் காட்டிப் புத்துலகை வாவா என் றழைக்கும் வேந்தன் )ی( 92