பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைத்தலைவன் வணிகத்தின் பெயராலே உள் நு ழைந்து வளஞ் சுரண் டி வாழ்வுயர்ந்து மக்கள் தம்மைப் பணிவித்து நயவஞ்சர் துணையால் நாட்டைப் பாழ்படுத்திப் பக்குவமாய் அடிமை யாக்கித் துணிவுளத்தால் ஆண்டிருந்த வெள்ளே ஆட்சி துாள்துள்ளாய்ப் போவதற்குத் தமிழர் நாட்டில் அணிவகுத்த வீரர் தமை ஆக்கித் தந்த ஆண் மகன் யார் ? பாரதியார்; வீரன் அன்ருே ? | (சு) வஞ்சினம் ' மிகவிரைவில் தமிழின் ஒளி உலகம் எங்கும் மேலோங்கும்; இலையேல்என் பெயரை மாற்றி இகழுங்கள் ' எனக்கனன்று சூளு ரைத்தான்; எ வர்மொழிக்கும் தலைவணங்கும் நம்மை நோக்கிப் புகழ்மிக்க தமிழ்மொழியை உலக மெல்லாம் புகுகின்ற தெருவெல்லாம் முழங்கச் செய்வீர் ! வகைகெட்டுப் போகாதீர் 1’ என்று ரைத்து வாழ்வுதந்த வீரனுக்கு வணக்கம் செய்வோம் (ίΌ) பொய்மிகுந்து துயர் செய்யும் கலியைக் கொன்று பூவுலகில் கிருதயுகம் கொணர்வேன்' என்ற மெய்மிகுந்த பேராற்றல் கொண்ட வீரன்; - மிகைசெய்யும் பழமையினைச் சாடி மக்கள் உய்வழியைத் தருவீரன்; " ஒருவன் உண்ண உணவின்றேல் உலகத்தை அழிப்போம்” என்று கைவலிமை காட்டியவன் பாடல் எல்லாம் காட்டுகிற வீரத்தைக் காட்டப் போமோ ? (கை) 93