பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

21



ரவீந்திரருக்கு தனது தாய்மொழியான வங்காள மொழியிலேயே ஆரம்பக் கல்வியை வீட்டில் கற்பிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். இவ்வாறு ஏற்பட்ட அடிப்படைத் தாய் மொழிக் கல்விப் போதனை, பிற்காலத்தில் ரவீந்திரருக்கு சிறந்த உதவியானது.

ரவீந்திரருக்கு காலை, மாலை இருவேளைகளிலும் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஓவியம் எழுதுவதிலும் அவர் பயிற்சி பெற்றார். ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசான் தினந்தோறும் இரவு நேரங்களில் வந்து கற்றுக் கொடுப்பதால், சில நேரங்களில் துக்கம் கெட்டுவிடுகின்றது என்பதால், ஆங்கிலம் கற்பதிலே அவருக்கு வெறுப்பு உருவானது. எப்போது மணி ஒன்பது அடிக்கும், ஆங்கில ஆசிரியர் பாடத்தை முடித்துக் கொண்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார். ரவீந்திரா்!

ஒன்பது மணிக்குப் பிறகு, தனது அன்னையிடம் செல்வார். கதைகள் ஏதாவது கூறுமாறு கேட்பார். அம்மையார் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது தாய் மடியிலே மகன் உறங்கிவிடுவாராம்.

பள்ளிக் கூடப் பாடம் ஒரு புறம்; அதே நேரத்தில் வீட்டிலே இங்கிலீஷ் ஆசிரியர் நடத்தும் பாடம் மறுபுறம்! இந்தக் கல்விச் சுமைகளே அவருக்குப் பெரிய பாரமாகி விட்டது. ஆங்கிலப் பாடம் நடக்கும்போது, ரவீந்திரா் தனக்கு வயிற்றுவலி என்று பொய்க் காரணம் சொல்லி, ஆங்கிலப் பாடச் சுமையிலே இருந்து தப்பித்துக் கொள்வார் பள்ளிக்கூடப்பாடச் சுமைகளைத் தாங்க முடியாமல் வெறுப்பு ஏற்படுவதுபோல, வீட்டுப் பாடப் போதனைகளையும் அவர் வெறுப்பதற்காகவே, ஏதாவது நோய் தமக்கு வாராதா என்று எதிர்பார்ப்பாராம்.