பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மணி மேன மணி மேன மணி மேன மணி மேன மணி மேன மணி மேன மணி மேன ')æíಗಿ கவியின் கனவு அதோ, நீ போக வேண்டிய வழி. நான் கேட்பது அவ்வழியல்ல; என் செவ்விழி சொல்லுமே என் இதய மொழியை. நான் அழகி. தாங்கள் அழகர். - புரிகிறது. நீயாகப் பேசவில்லை. யாரோ பேசக் கற்றுக் கொடுத்த பச்சைக்கிளி நீ உன் அறிவின் திறமையை விரைவில் அரங்கேற்றம் செய்து விடலாம். அதுவரை பொறுத்திரு. பொறுத்திருக்கச் சொல்வி என் கழுத்தை அறுத் தெரிக்கச் சொல்லுகிறீர்களா? பெண்ணே உன் உள்ளம் ஒரு நிலையில் இல்லை. உடலும் ஆடிக்கொண்டே இருக்கிறது. மன மயக்கமா? மது மயக்கமா? மயக்கமில்லை; தயக்கமில்லாத ஏதோ ஒரு இயக்கம். அதோ, ஆற்றைப் பாருங்கள்! இரு கரைகளையும் அணைத்துச் செல்கிறது. ஆறு வற்றிவிடும் கரையும் கரைந்துவிடும். அதோ, இணைபிரியாத கவரிமான்கள். மானத்தோடு வாழ்கின்றன. வெறுக்குந் துறவிபோல் பேசுகின்றீரே! தகுதியற்றப் பொருளை வெறுப்பதே தர்மம். இதெல்லாம் தங்கள் நடிப்புத் திறமைதானே? எனது நடிப்பு மேடையோடு நின்றுவிட்டது போ. - - தங்கள் கலையின் திறமையிலே ஒரு பாசம், பரிவு, பக்தி, பிரியம், பைத்தியம் எல்லாம். என் கலையின் திறமை உங்கள் கண்ணின் எரிச்ச லிலே காணாமல் போய்விட்டது. போய் விடு.