பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 23 கனிமொழி... அழகின் பொலிவு. அறிவின் நிறைவு அமைதியின் இருப்பிடம். அன்பின் சக்தி. சிறுமை கண்டு சீறும் வீரமங்கை சுகதேவனின் தங்கை, வயது 20. சாந்தி... கவிஞரின் மகள், கலைப் பூங்கோதை சுகதேவை. மணக்கிறாள். வயது 20. அரசி ஊர்வசி. கலையகந்தையாள். காமச்சிலையாள். கொலை வெறியினள். அழகான அரணை வயது 30. கலையுலகில் நாட்டரசி, விதிக்கும் விதிபடைக்கும் மதியாற்றல் மிக்கவள். இளவரசி மேனகை... முன்னன் வீரசிம்மனின் முதல் தாரத்தின் மகள். வயது 20. குழந்தை மணிவண்ணன். - குழந்தை சாந்தி... கிவிஞருக்கு மழலையின்பந் தரும் குழந்தைத் தெய்வங்கள். வயது 7-5. வாணி. கவிஞரின் மறைந்து போன துணைவி. நினைவு வடிவத்தில் அடிக்கடி அவன் கனவில் நிழலிடும் புனிதவதி. சாந்தி தன் தாய் வாணியின் சாயலையே உடையவள். ஆதலால், வாணி வேடமணியும் பெண்ணே பெரிய சாந்தியின் வேடத்தையும் அணிந்து, தனது நடிப்பின் திறமையை மேலும் உறுதிப் படுத்திக்கொள்ளும் வாய்ப்புள்ளது. மற்றும் வீரர்கள், மக்கள், கலைஞர்கள், ஐந்தாம் படைகள் முதலியோர்.