ஆசிரியத் தாழிசையும் துறையும் 161
சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப்
பொறிஎருத் துறுவலிப் புலவுநாறழல்வாய்ப் புனலாமென அனலாமெனப் புகையா நின்றன புவிமானேற்றை
என்றாங் கிவைஇவை இயங்கலின் எந்திறத்
திணிவரல் வேண்டலம் தனிவரல் விலக்கலின் இறுவரைமிசை எறிகுறும்பிடை இதுவென்னென
அதுநோனார் காவிரவிடைக் களவுளமது கற்றோரது கற்பன்றே.”
இது முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் மற்ற அடி இரண்டும் பதினாறு சீராய் அமைந்தது. இது இடையிடை குறைந்து வந்த ஆசிரியத்துறை.
4. ‘இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா
அரங்கம் அணிபொழிலாஆடும் போலும் இளவேனில் அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின் மரங்கொல் மனந்தகன்றார் நெஞ்சமென் செய்த
திளவேனில்.” இது நான்கடியாய் இடையிடை குறைந்து இடை மடக்காய் வந்த ஆசிரியத்துறை. இதில் முதலடியும் மூன்றா மடியும் நான்கு சீர்களாலும், இரண்டாமடியும் நான்காமடியும் ஐந்து சீர்களாலும் வந்தது காண்க.
க. பா,-11